• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருகோணமலை கிரிட் உபநிலையத்திற்கான 10 மெகாவொட் காற்று வலு மின்நிலையத்தின் ஒப்பந்தத்தை வழங்குதல்
- புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பாவனையை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை, மன்னார், போலவத்த, மாதம்பை, மற்றும் கப்பல்துறை கிரிட் உபநிலையங்களுக்காக மெகாவொட் 60 ஆற்றல் கொண்ட காற்று வலுவினை மின்சார விநியோக முறைமையில் சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சருவதேச போட்டி கேள்வி நடைமுறையினை பின்பற்றியும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டும் திருகோணமலை கிரிட் உபநிலையம் சார்பில் 10 மெகாவொட் காற்று வலு ஆற்றல் கொண்டதும் 20 வருட காலத்திற்கு மினசார கூறொன்று 14.52 ரூபா வீதம் (14.52 LKR/kWh) கொள்வனவு செய்வதற்கும் இந்த மின்நிலையத்தை மின்சார விநியோக முறைமையுடன் இணைத்து நிர்மாணிப்பதற்குமான ஒப்பந்தத்தை Capital City Holding Pvt. Ltd., நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.