2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சியம்பலாண்டுவ 100 மெகாவெட் சூரிய சக்தி மின்நிலையத்தை தனியார் துறையின் முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்துதல் - சியம்பலாண்டுவ சூரிய சக்தி மின்நிலையத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே சாத்தியத்தகவாய்வு, காணி ஒதுக்குகை, சுற்றாடல் மதிப்பீடு போன்ற தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மின் நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறை மற்றும் நிதி ஆய்வு என்பவற்றை மேற்கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி கிடைக்கப் பெற்றுள்ளது. அனுப்பீட்டு உட்கட்டமைப்பு வசதிகளுடன் உத்தேச கருத்திட்டத்தை செயற்படுத்தக்கூடிய பல்வேறுபட்ட ஆற்றல் நிலைமைகளுக்கு அமைவாக மின்சாரம் பிறப்பித்தல் மற்றும் அனுப்பீட்டுக்கான ஆகக்குறைந்த மின்சார கொள்வனவு கட்டணமொன்றைப் பெற்றுக் கொள்வதாயின் 100 மெகாவெட் தனி மின் நிலையம் மற்றும் அனுப்பீட்டு வசதிகள் என்பவற்றை ஒரே கேள்வியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்த ஆய்வின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை தனியார்துறை முதலீட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு அனுப்பீட்டு உரிமப்பத்திரதாரரான இங்கை மின்சார சபையினால் கேள்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் இந்த கருத்திட்டத்தின் கீழ் மெதகமவிலிருந்து அம்பாறை வரையிலான கம்பி வழி நிர்மாணிப்பு இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்வதற்குமாக மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |