• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 வரை அதிகரித்தல்
- சகல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் தழுவும் விதத்தில் 1,000 புதிய தேசிய பாடசாலைகளை தாபிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் 2019 திசெம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அதன் கூட்டத்தில் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 3 கட்டங்களின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதோடு, முதலாம் கட்டத்தின் கீழ் தற்போது தேசிய பாடசாலையொன்றேனும் இல்லாத 123 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மாகாண சபை பாடசாலை ஒன்று என்ற அடிப்படையில் தெரிவு செய்து தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் இனங்காணப்படும் தகவுதிறன்களின் மீது தெரிவு செய்யப்படும் 673 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கும் மூன்றாம் கட்டத்தின் கீழ் தற்போது இயங்கி வரும் 373 தேசிய பாடசாலைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.