• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய கலாசார நிதியத்தின் தொழிற்படு மூலதனத் தேவைகளுக்காக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
- உலகளவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதன் காரணமாக சுற்றுலாத் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையினால் மத்திய கலாசார நிதியத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது நிதியத்தின் பணிகளுக்காக 135 மில்லியன் ரூபா கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் நிறுவனத்தின் பணிகளை நடாத்திச் செல்வதற்கு இந்த தொகை போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிறுவனத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு மற்றும் நிர்மாணிப்பு நோக்கங்களுக்குரிய பற்றுச் சீட்டுகளைத் தீர்வு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடினை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.