• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல்
- களுத்துறை நீதிமன்ற கட்டடத் தொகுதி தற்போது தொல்பொருளியல் பெறுமதியுடன் கூடிய காணி மற்றும் கட்டடங்களில் நடாத்திச் செல்லப்படுகின்றதோடு, களுத்துறை நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு 1.064 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்று நீதி அமைச்சுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான மதியுரைச் சேவையை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.