2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை - சிங்கப்பூர் நாடுகளின் 50 வருட இராஜதந்திர உறவினை கொண்டாடும் முகமாக ஞாபகார்த்த முத்திரைகளை வௌியிடுதல் - இலங்கை - சிங்கப்பூர் நாடுகளின் 50 வருட இராஜதந்திர உறவினை கொண்டாடும் முகமாக இலங்கை தபால் திணைக்களமும் சிங்கப்பூர் தபால் நிறுவனமும் இரண்டு முத்திரைகள் வீதம் வௌியிடுவதற்கு உடன்பாடு கண்டுள்ளன. இதற்கிணங்க, இரண்டு நாடுகளினதும் பொதுவான தொனிப் பொருளாக 'சமுத்திர உயிரின பாதுகாப்பு' என்னும் தொனிப்பொருளின் கீழ் இந்த முத்திரைகளை வடிவமைப்பதற்கும் வௌியிடுடப்படும் முத்திரைகளிலிருந்து 4,000 வீதமும் ஞாபகார்த்த பத்திரம் 1,000 வீதமும் இரு தரப்புக்கும் இடையில் பரிமாறிக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடு வதற்காக வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |