2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலன்நறுவை நிருவாக கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல் - பொலன்நறுவை நிருவாக கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு 2016 ஒக்றோபர் மாதம் 18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் கட்டடத்திற்கு ஏற்கனவே 1.018 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதோடு, 19 அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களுக்கு இந்த கட்டடத்தில் இடவதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நிர்மாணிப்பு பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் குளிரூட்டி முறைமைகளைப் பொருத்துதல், மின் பிறப்பாக்கிகளைத் தாபித்தல், கேட்போர் கூடத்தின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் காணி அழகுபடுத்தல் பணிகள் என்பன செய்யவேண்டியுள்ளதோடு, அதன் பொருட்டு 265 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் கட்டடத்தின் வேலைகளை பூர்த்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |