• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அந்நிய செலாவணி வௌிப்பாச்சலை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்டுள்ள கட்டளைகளின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
- அந்நிய செலாவணி வௌிப்பாச்சலுக்கு காரணமாய் அமையும் மூலதன கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான வரையறைகளை விதிக்கும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் ஆறு (06) மாத காலத்திற்கு செல்லுபடியாகும் விதத்தில் கட்டளையொன்றை வௌியிடுவதற்கு 2020 யூன் மாதம் 24 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, 2020 யூலை மாதம் 02 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்தக் கட்டளையானது விதிக்கப்பட்டுள்ளதோடு, இதன் செல்லுபடியாகும் காலம் 2021 சனவரி மாதம் 01 ஆம் திகதியன்று முடிவடையவுள்ளது. இந்த கட்டளையினை மேலும் ஆறு (06) மாத காலத்திற்கு நீடிப்பது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.