2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்க வங்கி அமைப்பினை முறைப்படுத்தி வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் காலத்தை நீடித்தல் - தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பொருட்டு அரசாங்க வங்கி அமைப்பினை முறைப்படுத்தி வினைத்திறன் மிக்கதாக்குவதற்கு பொருத்தமான சிபாரிசுகளை மூன்று (03) மாத காலத்திற்குள் சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு 2020 யூலை மாதம் 22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. தற்போது நாட்டில் காணப்படும் நிலைமையினால் எதிர்பார்க்கப்பட்டவாறு குழுவின் பணிகளை பூர்த்தி செய்ய முடியாமற்போயுள்ளது. ஆதலால், இந்த குழுவின் கால எல்லையை 2020 நவெம்பர் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து மேலும் மூன்று (03) மாதங்களால் நீடிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |