2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
எப்பாவல, இராஜாங்கனை, நொச்சியாகம மற்றும் கிரிபாவ நீர்வழங்கல் கருத்திட்டம் - அப்போதைய பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுக்கு அமைவாக எப்பாவல, இராஜாங்கனை, நொச்சியாகம மற்றும் கிரிபாவ நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுவிற்சர்லாந்து கம்பனியொன்றிடமிருந்து விரிவான நிதிப் பிரேரிப்பு கோரப்பட்டுள்ளது. இந்தக் கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட செலவானது உயர் பெறுமதியினைக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆதலால், நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவன்திற்கு எடுத்துக் கொண்டு, இந்தக் கருத்திட்டத்திற்கான விடய நோக்கெல்லையைத் திருத்தி தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் தயாரிக்கப்படும் திட்டத்திற்கு அமைவாக நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் உள்நாட்டு நிதியைக் கொண்டு கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |