• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines Limited கம்பனிக்கான உத்தேச தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்
- SriLankan Airlines Limited கம்பனியானது முகங்கொடுத்துள்ள நிதிப் பிரச்சினை காரணமாக தன்னார்வ ஓய்வூதியத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் ஆராய்வதற்காக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் கம்பனியின் எதிர்வரும் மூன்று (03) வருடகால செயற்பாட்டிற்கு குந்தகமின்று உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அண்ணளவாக 560 ஊழியர்கள் ஓய்வு பெறுவார்களென எதிர்பார்க்கப்படுவதோடு, இதன்பொருட்டு 1.46 மில்லியன் ரூபா செலவாகுமென கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.