• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இந்தியாவின் இமாலய Bio - Resource நிறுவனத்திற்கும் விஞ்ஞான தொழினுட்ப ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இந்திய - இலங்கை கூட்டு ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 'அதிதொழினுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேயிலை செடியின் மரபுவழி போக்கினை அறிந்து கொள்வதனை துரிதப்படுத்துதல் மற்றும் முக்கிய தனித்தன்மை போக்கினை கண்டறிதல்' என்னும் இரண்டு (02) வருடகால ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்று இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கொடையொன்றாக கிடைக்கப்பெற்றுள்ளது. தேயிலை வகைகளை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக எடுக்கப்படும் காலத்தினை குறைத்து இனப்பெருக்க நிகழ்ச்சித்திட்டங்களை துரிதப்படுத்துவதற்குத் தேவையான உயிரியல் கருவிகளை உற்பத்தி செய்வது இந்த ஆராய்ச்சியின் மூல நோக்கமாகும். இதற்கிணங்க, இந்த ஆராய்ச்சி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவின் இமாலய Bio - Resource நிறுவனம் விஞ்ஞான தொழினுட்ப ஆராய்ச்சி கவுன்சில் என்பனவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.