• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சௌபாக்கியா உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆறு பயிர்களுக்கு உற்பத்தி நிவாரணங்களை வழங்குதல்
- உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் 16 பயிர் வகைகள் சார்பில் இந்தப் பயிர் வகைகளை பயிரிடும் விவசாயிகளுக்கு உத்தரவாத விலையினை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் தலையீட்டில் விதைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஏற்கனவே இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ள சோளம், மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கிழங்கு மற்றும் உழுந்து போன்ற பயிர்களின் வருடாந்த நுகர்வுத் தேவையை உள்நாட்டில் பெற்றுக் கொள்வதற்காக இந்தப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு தேவையான விதைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்தக்தின் உதவி வழங்கப்படுவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2020/2021 பெரும்போகத்தில் சோளச் செய்கைக்கு ஒரு ஏக்கர் வரையும் மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கிழங்கு மற்றும் உழுந்து செய்கைக்கு 1/2 ஏக்கர் வரையும் தேவைப்படும் விதைகளைப் பெற்றுக் கொள்வதற்கு செலவாகும் தொகையிலிருந்து 50 சதவீத மானியத்தினை வழங்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.