• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை உரக் கம்பனிக்குச் சொந்தமான உர பரிசோதனை ஆய்வுகூடத்தின் உரிமையை தேசிய உர செயலகத்திற்கு கையளித்தல்
- இலங்கை உரக் கம்பனிக்குச் சொந்தமான உர பரிசோதனை ஆய்வுகூடத்தின் மூலம் உர மாதிரிகளை பரிசோதித்து உரிய நிறுவனத்திற்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இலங்கை உரக்கம்பனி உர விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள வர்த்தக நிறுவனமொன்றாக செயற்படுகின்றமை யினால், மாதிரிகளை பரிசோதனை செய்யும் ஒழுங்குறுத்துகை பணிகளை மேற்கொள்வது பொருத்தமற்றதென தெரியவந்துள்ளது. ஆதலால், உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக உர பரிசோதனை ஆய்வுகூடத்தின் உரிமையை அதற்குரிய அசையும் அசையா சொத்துக்களுடன் சேர்த்து தேசிய உர செயலகத்திற்கு கையளிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.