2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலை மற்றும் முன்பள்ளிக் கூடங்களின் கூரைகளுக்காக கல்நார் கூரைத் தகடுகளுக்குப் பதிலாக சுற்றாடல் நட்புறவுமிக்க பொருட்களை பயன்படுத்துதல் - ஏற்கனவே சகல விதமான கல்நார் வகைகளினால் நுரையீரல் புற்றுநோய் மற்றும் குரல்வளை புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்நிலைமைகள் உருவாகின்றதென உலக சுகாதார அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், பாடசாலை மற்றும் முன்பள்ளிக் கூடங்களின் கட்டடங்களுக்கான கூரைகளுக்கு கல்நார்க்குப் பதிலாக சுற்றாடல் நட்புறவுமிக்க பதிலீடுகளை பயன்படுத்துவதன் மூலம் பாடசாலை மற்றும் முன்பள்ளி கூடங்களின் மாணவர்களை கல்நார் வகை கூரைகள் உள்ள கட்டடங்களில் இருப்பதை தவிர்ப்பதற்கு இயலுமாவதோடு, அவர்களுடைய ஆரோக்கியம் தொடர்பில் எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கையொன்றாகும். இதற்கிணங்க, கல்நார் வகைகளின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படக்கூடிய பிரதிகூலமான தாக்கங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் பாடசாலை மற்றும் முன்பள்ளி கூடங்களுக்கான கட்டடங்களின் கூரைகளுக்கு கல்நார் பயன்படுத்துவதற்குப் பதிலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஓடு போன்ற பிற சுற்றாடல் நட்புறவுமிக்க பதிலீடுகளை பயன்படுத்தும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |