• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌிநாட்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் லண்டன் Encompass Digital Media Services Limited நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- இலங்கை அரசாங்கத்திற்கும் ஜேர்மன் பெடரல் குடியரசின் வௌிநாட்டு ஒலிபரப்புச் சேவையொன்றான டொயிஷ்வெல் நிறுவனத்திற்கும் இடையில் 1980 ஆம் ஆண்டில் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக திருகோணமலை ஒலிபரப்பு நிலையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, 2012 ஆம் ஆணடில் இந்த ஒலிபரப்பு நிலையத்தின் செயற்பாட்டு பணிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், வௌிநாட்டு ஊடக நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஒலிபரப்பு நிலையத்தின் ஊடாக நிகழ்ச்சித்திட்டங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. வௌிநாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் சிற்றலை மற்றும் மத்திய அலைவரிசை மூலம் ஒலிபரப்புவதற்கு லண்டனிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளை கையாளும் Encompass Digital Media Services Limited நிறுவனத்தினால் வர்த்தகப் பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த ஒலிபரப்பு நிலையத்தின் ஒலிபரப்புக் காலத்தை இந்த நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் முறையே மாதாந்தம் 49,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களும் 16,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களும் கொண்ட அந்நிய செலாவணியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு பிறப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு நிலவுகின்றது. இதற்கிணங்க, திருகோணமலையிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நிலையத்தைப் பயன்படுத்தி வௌிநாட்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் லண்டன் Encompass Digital Media Services Limited நிறுவனததிற்கும் இடையில் ஒலிபரப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.