• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்மலானை பிரதேச செயலகத்திற்காக காணித் துண்டொன்றை சுவீகரித்தல்
- தற்போது 26 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றில் அமைந்துள்ள கட்டடத்தில் நடாத்திச் செல்லப்படும் இரத்மலானை பிரதேச செயலகத்தில் போதுமான இடவதி இல்லாமையினால் இந்தப் பிரதேச மக்களுக்கு சிறப்பான முறையில் அரசாங்க சேவைகளை வழங்கும் வகையில் இந்த அலுவலகத்திற்குப் புதிய கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு இனங்காணப்பட்டுள்ள இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியிலிருந்து 100 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை இரத்மலானை பிரதேச செயலகத்தை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.