• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாவட்ட செயலாளர்களின் / அரசாங்க அதிபர்களின் பொறுப்பிலுள்ள நெல் கையிருப்புகளையும் நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள நெல் கையிருப்புகளையும் அரிசியாக்குவதன் மூலம் விற்பனை செய்தல்
- தற்போது திறந்த சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறை மற்றும் கட்டுப்பாட்டு விலைக்கு போதுமான அளவு அரிசியினை வழங்குவதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் முன்வராமை போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மாவட்ட செயலாளர்களின் / அரசாங்க அதிபர்களின் பொறுப்பிலுள்ள நெல் கையிருப்புகளையும் நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள நெல் கையிருப்புகளையும் அரிசியாக்கி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக நுகர்வோருக்கு கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.