• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொவிட் - 19 (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்
- கொவிட் - 19 தொற்று காரணமாக தற்போது நீதிமன்றங்களிலுள்ள வழக்கு நடவடிக்கை களுக்குரியதாக நீதியை நிறைவேற்றும் போது உரிய சகல தரப்பினர்களுக்கும் ஆட்களுக்கும் சட்ட ரீதியிலான பாதுகாப்பினை வழங்கும் விதத்தில் திட்டவட்டமான தற்காலிக நடவடிக்கையினை எடுக்கும் தேவை எழுந்துள்ளது. முக்கியமாக எவரேனும் ஆள் ஒருவருக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சில நடவடிக்கைகளை எடுக்குமாறு விதித்துரைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கொவிட் - 19 தொற்று காரணமாக உரிய காலப்பகுதியின் பின்னரும் குறித்த நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளை விதித்துரைப்பது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, இனங்காணப்பட்டுள்ள அத்தகைய விடயங்களை உள்ளடக்கி உரிய ஏற்பாடுகளை விதித்துரைப்பதற்காக கொவிட் - 19 (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.