• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அங்கம்பிட்டிய வீதியை எதுல்கோட்டையிலும் பாடசாலை ஒழுங்கையை ராஜகிரிய நாவலயிலும் இணைத்து ராஜகிரிய நாவல கால்வாய்க்கு குறுக்காக புதிய பாலமொன்றை நிர்மாணித்தல்
- அங்கம்பிட்டிய வீதியை எதுல்கோட்டையிலும் பாடசாலை ஒழுங்கையை ராஜகிரிய நாவலயிலும் இணைத்து ராஜகிரிய நாவல கால்வாய்க்கு குறுக்காக புதிய பாலமொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு மட்டுப்படுத்தப்பட்ட போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை அரசாங்க அபிவிருத்தி நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு 1,698.55 மில்லியன் ரூபாவைக் (VAT இன்றி) கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.