2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அதிக வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக சேதமடைந்த தேயிலை செய்கைகளுக்காக சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் - அதிக வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக சேதமடைந்த தேயிலை செய்கைகளின் மீள் நடுகைக்காக சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு இலவசமாக தேயிலைக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 2020 யூன் மாதம் 03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, ஏற்கனவே சிறிய தேயிலைத்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக 105 மில்லியன் ரூபாவை செலவழித்து கொள்வனவு செய்யப்பட்ட 3.5 மில்லியன் தேயிலைக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதெனவும் இந்த ஆண்டின் மீதிக் காலப்பகுதியினுள் மேலும் 75 மில்லியன் ரூபாவை செலவழித்து 2.5 மில்லியன் தேயிலைக் கன்றுகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதெனவும் தெரிவித்து பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |