2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காணியற்ற இராணுவ வீரர்களுக்கு குடியிருப்பதற்காக அரசாங்கக் காணிகளை வழங்குதல் - இராணுவ வீரர்களுக்கு அரசாங்கக் காணிகளை வழங்கும் பொருட்டு முன்னர் நிலவிய கொள்கையானது 2016 யூலை மாதம் 18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் திருத்தப்பட்டு புதிய வழிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இதற்கு முன்னர் நிலவிய கொள்கையின் கீழ் காணிகள் வழங்கப்பட்ட ஒருசில இராணுவ வீரர்கள் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளமை பற்றி அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆதலால், ஒரே வகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு சலுகை வழங்கும்போது நிகழ்ந்துள்ள அநீதியினை இல்லாதொழிப்பதற்கு புதிய வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |