• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகளைத் தொடர்வதற்கு பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகளைத் தொடர்வதற்கு பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து அறவிடப்படும் பின்வரும் கட்டணங்களுக்கு 2020 மார்ச் மாதத்திலிருந்து விலக்களிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

* அனுமதிப் பத்திரங்களை இற்றைப்படுத்துவதற்கான கட்டணம்
* தாமதக் கட்டணம்
* கேள்விக் கட்டணம்
* குறிப்பேட்டுக் கட்டணம்
* பிரவேசப் பத்திரக் கட்டணம்
* அதிவேக பாதைகளின் தற்காலிக அனுமதி பத்திரக் கட்டணம்

ஆயினும், இந்த தொற்று நிலைமை மீண்டும் எழுந்துள்ளதன் காரணமாக பேருந்து சேவை வழங்குநர்கள் தொடர்ந்தும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளமையினால், பயணிகள் போக்குவரத்து சேவையை தரம் மிக்கதாகவும் வினைத்திறனுடனும் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்தும் இந்த சலுகைகள் பேருந்து சேவை வழங்குநர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.