2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிறுவர் அறுவை சிகிச்சை காவறை ஒன்றை நிர்மாணித்தல் - சப்பிரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பரந்த அளவில் சேவையினை வழங்கும் வைத்தியசாலை இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலை ஆகும். ஏனைய மாகாணங்களிலுள்ள பெரும்பாலான நோயாளிகளும் இந்த வைத்தியசாலை ஊடாக சேவையினைப் பெற்றுக் கொள்கின்றனர். இங்குள்ள 116 கட்டில்களைக் கொண்ட சிறுவர் காவறை தொகுதிக்கு தேவையான வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை காவறையொன்றின் தேவை நிலவுகின்றமையினால் உரிய சிறுவர் காவறை கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் சிறுவர் அறுவை சிகிச்சை காவறையொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, செலவாகும் தொகையினை நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு இந்த அறுவை சிகிச்சை காவறையை நிர்மாணிப்பதற்கும் இதன் பொருட்டு சுகாதார அமைச்சுக்கும் உரிய நன்கொடையாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |