• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய கைவினைஞர்களின் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருளாக பயன்படுத்திய வெற்று குண்டுகள் மற்றும் பாவனையிலிருந்து அப்புறப்படுத்திய கவசத்தகடுகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளல்
- பாரம்பரிய கைப்பணி மற்றும் கிராமிய கைத்தொழில் துறையானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தினை செலுத்தக்கூடிய துறையொன்றாகையினால், கைவினைஞர்களைப் பலப்படுத்தும் பொருட்டு அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதன்பால் கவனம் செலுத்தப் பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்யும் போது இறக்குமதி பொருட்களுடன் போட்டியாக இருக்கும் விதத்தில் அவற்றின் விலைகளை நிர்ணயிப்பதற்கு உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பினை வழங்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான மூலப் பொருட்களை சலுகை அடிப்படையில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு இலங்கை தரைப்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை என்பன பயன்படுத்திய வெற்று குண்டுகள் (செப்பு) மற்றும் பாவனையிலிருந்து அப்புறப்படுத்திய கவசத்தகடுகள் ஆகியவற்றை கொள்வனவு நடவடிக்கை முறையிலிருந்து விலகி 2017ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப் பட்டுள்ள விலை சூத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு தேசிய கைப்பணிச் சபைக்கு வழங்குவதற்கும் இலங்கை ரெலிகொம், இலங்கை புகையிரத திணைக்களம், இலங்கை மின்சார சபை, தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை ஆகிய நிறுவனங்களினால் அப்புறப்படுத்தப்படும் பித்தளை, செப்பு மற்றும் அலுமினியம் போன்ற பொருட்களை தேசிய கைப்பணிச் சபைக்கு வழங்குவ தற்குமாக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.