2020-11-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்களைத் தாபிக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்ட - கிராமிய உற்பத்திகளை முறையான வியாபார கட்டமைப்பிற்குள் அபிவிருத்தி செய்து ஏற்றுமதி வழங்கள் தொடர் செயற்பாட்டுடன் இணைப்பதற்கும் இறக்குமதி பதிலீடுகளாக உள்நாட்டு உற்பத்தி தொழிலை விருத்தி செய்வதற்கும் இயலுமாகும் வகையில் ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இனங்காணப்படும் பிரதேசமொன்றினுள் பரந்துள்ள ஒரே மாதிரியான உற்பத்தியாளர்களை ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்கள் கம்பனியொன்றாக ஒன்று திரட்டி அவர்களுடைய உற்பத்திகளை ஏற்றுமதி சந்தைக்கு அனுப்புவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதும், இதன்போது உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைக் குறைத்து தீர்வுகளை வழங்குவதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாக கொள்ளப்பட்டுள்ளது. கமத்தொழில், கடற்றொழில், கைத்தொழில் மற்றும் சேவைகள் என்னும் துறைகளை தழுவும் விதத்தில் இந்த ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களை தாபிப்பதற்கும் முதற்தர ஏற்றுமதி கம்பனிகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதன் மூலம் இந்த ஏற்றுமதி கிராமங்கள் கம்பனிகள் நிலையான தன்மையை கொண்டிருப்பதற்கான வழிவகையினை செய்வதற்கும் எதிர்பார்க்கப் படுகின்றது. இதற்கிணங்க, வர்த்தக அமைச்சின் வழிகாட்டலின் மீது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் தேவையான நிதியினைப் பயன்படுத்தி உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |