• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுள் தெரிவுசெய்யப்பட்ட 14 பக்தர்களுக்கு வீடுகளை நிர்மாணித்தல்
- 2019‑04‑21 ஆம் திகதியன்று நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2019 செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கு வீடுடொன்றினை நிர்மாணி்பதற்கு 3.24 மில்லியன் ரூபா வீதம் 14 வீடுகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.