• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புன்னைக் குடாவில் தாபிக்கப்படவுள்ள ஆடை உற்பத்தி தொழில்முயற்சி களுக்கான விசேட கைத்தொழில் வலயம்
- கைத்தொழில் அமைச்சின் விசேட முன்னுரிமையாக முதலீட்டு சபை மற்றும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழு என்பவற்றுடன் இணைந்து ஏறாவூர் பிரதேசத்தில் ஆடை உற்பத்தி கைத்தொழில் பேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புன்னைக் குடாவில் தாபிக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டையை "ஆடை உற்பத்தி சார்ந்த தொழில்முயற்சிகளுக்கான விசேட கைத்தொழில் வலயமாக" திறமுறை அபிவிருத்தி கருத்திட்ட மொன்றென பிரகடனப்படுத்துவதற்கும் இதன் பொருட்டு இனங்காணப்பட்டுள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 275 ஏக்கர் காணியை இலங்கை முதலீட்டுச் சபைக்கு கையளிப்பதற்கும் இந்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி ஏற்பாட்டினைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்த கைத்தொழில் பேட்டையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு களை வழங்குவதற்குமாக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.