• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர் நலன் கொண்ட சமூக அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய மானிய உதவியினை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இந்திய குடியரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல்
- இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளையும் அபிவிருத்தி ஒத்துழைப்புகளையும் பலப்படுத்தும் நோக்கில் சிறிய அளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் 2005 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு மானிய உதவியினை வழங்கியுள்ளது. இந்த மானிய உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி துறைகளின் உட்கட்டமைப்பு வதிகளை அபிவிருத்தி செய்வதற்கு உரியதான பல கருத்திட்டங்கள் அரசாங்க நிறுவனங்கள், உள்ளூராட்சி அதிகாரசபைகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் என்பவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் 2020-2025 வரையிலான ஐந்து (05) வருட காலப் பகுதி சார்பிலும் ஆகக்கூடுதலான நலன்களுடன் சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவியினை வழங்குவதற்கு இந்திய குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, இதன் பொருட்டு இந்திய அரசாங்கத்துடன் புதிய உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்காக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.