• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மன்னார் தீவில் காற்று மின்வலு கருத்திட்டத்தை அபிவிருத்தி செய்த
- ஆசிய அபிவிருத்தி வங்கியன் 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் 100 மெகாவொட் காற்று மின்வலு நிலையமொன்றை மன்னார் தீவில் நிர்மாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பௌதிக முன்னேற்றமானது 73 சதவீதமாவதோடு, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உரிய நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையிலிருந்து 47 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மீதியாகவுள்ளதோடு, இந்த தொகையிலிருந்து குறித்த மின்வலு நிலையத்தில் மேலும் 06 காற்று டேர்பைன்களை பொருத்துவதற்கான சாத்தியம் நிலவுகின்றமை தெரிய வந்துள்ளது. இதற்கிணங்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்த மின்வலு நிலையத்தின் பிறப்பாக்கல் திறனை சுமார் 20 மெகாவொட்களால் அதிகரித்துக் கொள்ளும் சாத்தியம் நிலவுகின்றது. ஆற்றலை அதிகாரிக்கும் பிரேரிப்புக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை ரீதியிலான உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதோடு, அதற்கமைவாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.