• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதுகாக்கப்பட்டதும் ஒதுக்கப்பட்டதுமான காடுகள் தவிர வனப் பாதுகாப்பு அதிபதியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஏனைய காடுகளிலிருந்து காடுகள் அல்லாத காணிகளை பயனுள்ள பொருளாதார நோக்கங்களுக்காக பயன்படுததும் பொருட்டு வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்
- ஏனைய காடுகளின் கீழ் எடுக்கப்படும் காடுகள் அல்லத காணிகளை சேனைப் பயிர்ச்செய்கை, பிற பயிர்ச்செய்கைகள் மற்றும் தற்காலிக பொருளாதார நடவடிக்கைகள் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு அங்கீகாரம் வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு கையளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தினை நீக்கி அமைச்சுகளுக்கிடையிலான குழுவொன்றுக்கு கையளிப்பதற்கு 2006 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் காரணமாக குறித்த காணிகளில் தற்காலிகமாக சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் பிற பொருளதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள சிரமங்களை குறைக்கும் பொருட்டு இத்தகைய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கும் எளிய வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென 2020 யூலை மாதம் 01 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகிய அமைச்சுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களினால் விடயங்கள் ஆராயப்பட்டு புதிய வழிமுறை யொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறையினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரினாலும் சுற்றாடல் அமைச்சரினாலும் காணி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.