2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ருமேனியாவிலும் ஸ்பெயின் இராச்சியத்திலும் இலங்கை தூதரகங்களைத் தாபித்தல் - ருமேனியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1957 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் தாபிக்கப்பட்டதோடு, தற்போது இருநாடுகளுக்கும் இடையில் சிறந்த இருதரப்பு உறவுகள் கட்டியெழுப் பட்டுள்ளன. அதேபோன்று இலங்கைக்கும் ஸ்பெயின் இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1955 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் உறவுகளை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் இந்த இரு நாடுகளிலும் இலங்கை தூதரகங்களை தாபிக்கும் பொருட்டு வெளிநாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |