• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிலியந்தலை கஹபொல ரெஜிடேல்வத்த காணியை தேசிய மிருக காட்சிசாலைகள் திணைக்களத்திற்கு மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளல்
- மிருககாட்சிசாலைகள் திணைக்களத்தின் பொறுப்பிலிருந்த பிலியந்தலை கஹபொல ரெஜிடேல்வத்த காணியானது அப்போதைய புத்தசாசனம் என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சுக்கு உடைமையாக்கிக் கொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் கீழ் "Light of Asia" என்னும் தாபனத்திற்கு உடைமையாக்கி இந்தியாவின் "சாக்கிய குடியேற்ற" மீள்நிர்மாண கருத் திட்டத்திற்காக வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டமானது 2017 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2020 மார்ச் மாதத்தில் பூர்த்தி செய்யப்படவிருந்த போதிலும் தற்போது அதன் முன்னேற்றமானது 5 சதவீதத்தினை விட குறைவான மட்டத்தில் நிலவுகின்றமையினால், "Light of Asia" தாபனத்துடன் செய்து கொண்டுள்ள குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையை இரத்துச் செய்து இந்த காணியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் மீளப் பொறுப்பேற்பதற்கும் இந்த அமைச்சின் எதிர்கால அபிவிருத்தி நோக்கங் களுக்காக ஐந்து ஏக்கர் காணியை அமைச்சின் பொறுப்பில் வைத்துக் கொண்டு மீதி காணியை தேசிய மிருககாட்சிசாலைகள் திணைக்களத்திற்கு மீளக் கையளிப்பதற்குமாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.