2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளைத் தாபித்தல் தற்போது தாபிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளை வர்த்தமானியில் பிரசுரித்தல் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தாபித்தல் மற்றும் மீளமைத்தல் என்பன பொருட்டு எல்லை நிர்ணய குழுவொன்றை நியமித்தல் - அரசாங்க நிருவாகம், அபிவிருத்தி தேவைகள் மற்றும் பொதுத் தேவைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் சில பிரதேசங்களில் புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளைத் தாபிப்பதற்கும் சில பிரிவுகளை மீளத் தாபிப்பதற்கும் ஏற்கனவே தாபிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகளை நிர்ணயிப்ப தற்கும் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் புதிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தாபிப்பதற்கும் தற்போதுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை மீளமைப்பதற்கும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் பொது அமைப்புகளிட மிருந்தும் கோரிக்கைகள் பல கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நோக்கம் கருதி ஐந்து (05) வருடங்களுக்கு ஒரு தடவை எல்லை நிர்ணய குழு தாபிக்கப்படவேண்டியிருந்தாலும் இறுதியாக 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அதில் காணப்பட்ட தொழினுட்ப குறைபாடு காரணமாக வர்த்தமானியில் பிரசுரித்து உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆதலால், உரிய பணிகளை புரிவததற்காக புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |