2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணைச் சட்டத்தை திருத்துதல் - 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டத் தொகை தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவையாக இல்லாமையினால் இந்த சட்டத்தை திருத்தும் பொருட்டு 2019 செப்ரெம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டதும் திருத்தப்பட்டதுமான இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |