2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை விமான தகவல் பிராந்தியத்தை முழு மறுசீரமைப்புக்கு உட்படுத்துதல் - இலங்கை விமான தகவல் பிராந்தியமானது இலங்கையின் மொத்த நிலப்பரப்பை போன்று 25 மடங்காவதோடு, இந்த விமான தகவல் பிராந்தியத்தினுள் தரம்மிக்க விமான வழி கண்டறியும் சேவையினை வழங்கும் பொறுப்பானது வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) கம்பனிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, எதிர்காலத்தில் ஆசிய பசுபிக் வலயத்தில் எதிர்பார்க்கப்படும் திறனை பூர்த்தி செய்வதற்குத் தேவையான சேவைகளையும் அதேபோன்று சருவதேச சிவில் விமான சேவைகள் அமைப்பினால் விதித்துரைக்கப்பட்டுள்ளள தரங்களுக்கு அமைவாக விமான பயண சேவைகள் நடவடிக்கை முறைகள் மற்றும் அதனோடு இணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் என்பன இலங்கையினால் பேணப்படுதல் வேண்டும்.
ஆதலால், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இலங்கை விமான தகவல் பிராந்தியத்தினுள் தற்போதுள்ள விமான பாதை கட்டமைப்பானது துரிதமாக மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமென்பதோடு, இது சருவசே சிவில் அமைப்பின் "தடையற்ற விமான சேவை நோக்கத்திற்கு" அமைவான விதத்தில் தயாரிக்கப்படுதலும் வேண்டும். இதற்கிணங்க, விமான பயண முகாமைத்துவ திறனை மேம்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை விமான தகவல் பிராந்தியம் பற்றி ஆராய்ந்து முழு மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதற்கும் இந்த மறுசீரமைப்பின் பொருட்டு கூட்டு நிபுணத்துவ மதியுரைச் சேவையொன்றின் சேவையினைப் பெற்றுக் கொள்வதற்குமாக சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |