2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் பின்லாந்தின் எல்ட்டோ (Aalto University) பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியினை ஒன்றிணைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல் - மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் பின்லாந்தின் எல்ட்டோ (Aalto University) பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு இரு தரப்பும் உடன்பாடு கண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் இரு தரப்புகளினதும் நிறுவனம் சார் பதவியணி, திணைக்களம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பினை ஆரம்பித்தல், வசதிகளை வழங்குதல், கூட்டாக ஆராய்ச்சி சம்மேளனங்கள் உட்பட வேறு செயற்பாடுகளை மேற்கொள்தல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் பின்லாந்தின் எல்ட்டோ (Aalto University) பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |