• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச நகர அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு அரசாங்க மற்றும் தனியார் காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்தல் / சுவீகரித்தல்
- கொழும்பு நகரம் அடங்கலாக பிரதான நகரங்களை மையப்படுத்தி நகர அபிவிருத்தி கருத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இந்த கருத்திட்டங்களுக்குரிய பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு இனங்காணப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணித் துண்டுகளையும் அதேபோன்று தனியார் துறைக்குச் சொந்தமான காணித் துண்டுகளையும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கிணங்க அரசாங்கத்திற்குச் சொந்தமான 39 காணித் துண்டுகளை அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் இறையிலிக் கொடையொன்றாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கும் தனியார் உரிமைகளைக் கொண்டுள்ள ஐந்து காணித் துண்டுகளை காணி சுவீகரித்தல் சட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்காக சுவீகரித்துக் கொள்வதற்குமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.