• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு பிரேரிப்புகளைக் கோருதல்
- தற்போது பின்பற்றப்பட்டு வரும் வழிமுறைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்காக எடுக்கப்படும் காலத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை உத்தேச அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைவாக தனியார்துறையின் முழுமையான ஒத்துழைப்புடனும் பங்களிப்பின் கீழும் அதேபோன்று அரசாங்க மற்றும் தனியார் துறையின் பங்குடமையின் கீழும் அபிவிருத்தி நோக்கம் கருதி அரசாங்க பெறுகை வழிகாட்டலுக்கு அமைவாக கையளிக்கும் பொருட்டு அபிவிருத்தி பிரேரிப்புகளை கோரும் அதிகாரத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளித்தல்.

* அரசாங்க மற்றும் தனியார் துறையின் பங்குடமையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் கருத்திட்டங்களுக்காக இனங்காணப்பட்டுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்கு போட்டி கேள்வி கோருவதன் மூலம் அக்கறையுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகளைக் கோருதல்.

* குறித்த பிரேரிப்புகளை மதிப்பிடும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இனக்கப்பேச்சுக் குழுவொன்றையும் ஒவ்வொரு கருத்திட்டத்தினதும் தன்மைக்கு ஏற்ப கருத்திட்ட குழுக்களையும் நியமித்தல்.

* காணிகளின் பெறுமதிகளை தீர்மானிக்கும் போது அரசாங்கத்தின் பிரதான விலைமதிப்பீட்டாளரின் விலைமதிப்பீட்டு பெறுமதியினை அடிப்படையாகக் கொள்தல்.

* அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இனக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் உரிய காணித் துண்டுகளை தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குதல்.