• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 73 ஆவது சுதந்திரதின விழா
- 2021 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 73 ஆவது தேசிய தின விழா தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தி கையாள்வதற்கு பின்வரும் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரதம அமைச்சர் - (தலைவர்)

* மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்கள், கல்வி அமைச்சர்

* மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்கள், வெளிநாட்டு அமைச்சர்

* மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்கள், அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

* மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள், வெகுசன ஊடக அமைச்சர்

* மாண்புமிகு சமல் ராஜபக்ஷ அவர்கள், நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சரும்

* மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்கள், மின்சக்தி அமைச்சர்

* மாண்புமிகு வாசுதேவ நாணயக்கார அவர்கள், நீர்வழங்கல் அமைச்சர்