- 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வரையும் பொருட்டு 2020 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, 2020 நிதி ஆண்டிற்கான மொத்த மீணடுவரும் செலவினம் 2,692 பில்லியன் ரூபாவாகவும் மூலதனச் செலவுகள் 1,846 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மதிப்பீட்டினுள் பின்வரும் நிதி ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
* இதற்கு முன்னர் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு இடைக்கால கணக்குகள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகள்.
* அரசியலமைப்பின் 150 ஆம் உறுப்புரையின் (3) ஆம் துணை உறுப்புரையின் பிரகாரம் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அங்கீகரிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட செலவுகள் சார்பிலான நிதி ஏற்பாடு.
* 2019 ஆம் ஆண்டு சார்பில் செலவு செய்யப்பட்டுள்ள இருப்பினும் கணக்கிடப்படாத 211 பில்லியன் ரூபாவைக் கொண்ட செலவினை கணக்கிடுவதற்கான நிதி ஏற்பாடு.
இதற்கிணங்க, 2020 நிதி ஆண்டு சார்பில் சட்டவரைநரினால் வரையப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.