2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் "விசேட வைப்புக் கணக்குகளை" நடாத்திச் செல்வது சம்பந்தமான ஒழுங்குவிதிகளை வௌியிடுதல்
-- நாட்டினுள் அந்நிய செலாவணி ஓட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆறு (06) மாத காலத்திற்கு வங்கி முறைமையின் ஊடாக நாட்டினுள் அனுப்பப்படும் நிதியினை வைப்பிலிடுவதற்காக "விசேட வைப்புக் கணக்குகள்" என்னும் பெயரில் நடைமுறைசார் வைப்புக் கணக்குகளை ஆரம்பித்து நடாத்திச் செல்லும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை வௌியிடுவதற்கு 2020 ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் செல்லுபடியாகும் காலம் 2020 ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதியன்று முடிவடையவுள்ளதோடு, இந்த ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட வௌிநாட்டு நிதியினை மேலும் நாட்டில் தக்கவைத்துக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் பின்வரும் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
* காலவதியானதன் பின்னர் மீண்டும் புதுப்பித்து நடாத்திச் செல்லப்படும் "விசேட வைப்புக் கணக்குகள்" சார்பில் பொது வைப்புகளுக்கான வட்டி விகிதாசாரத்தை செலுத்துதல்.
* "விசேட வைப்புக் கணக்குகளின்" முதிர்ச்சியின் போது வருமானத்தினை இலங்கையிலுள்ள வேறு கணக்குகளுக்கு மாற்றுவதற்கு அனுமதியளித்தல்.
* இலங்கையில் வசிக்கும் இருப்பினும் வௌிநாட்டு நிதிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு தகைமையற்றோரின் (அரச சார்பற்ற அமைப்புகள், உத்தரவாதக் கம்பனிகள் போன்ற) "விசேட வைப்புக் கணக்குகளின்" முதிர்ச்சியின் போதான வருமானத்தினை எதிர்காலத்தில் இலங்கைக்கு வௌியே அனுப்பாதிருக்கும் அடிப்படையில் இலங்கை ரூபா கணக்கொன்றிற்கு வரவு வைத்தல்.
இதற்கிணங்க, "விசேட வைப்புக் கணக்குகள்" சம்பந்தமாக 2020‑04‑08 ஆம் திகதியிடப்பட்டதும் 2170/4 ஆம் இலக்கத்தைக் கொண்டதும் 2020‑07‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 2182/32 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு மேலதிகமாக அந்நிய செலாவணி சட்டத்தின் 29 ஆம் பிரிவுடன் வாசிக்கப்படவேண்டிய 7ஆம் பிரிவின் பிரகாரம் புதிய ஒழுங்குவிதிகளை பிரகடனப்படுத்தும் பொருட்டும் இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.