2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் மாடுகள் அறுப்பதை தடைசெய்த – கமத்தொழிலினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தினை கொண்டுள்ள நாடொன்றாக இலங்கை கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு கால்நடை வளத்திலிருந்து கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். மாடுகள் அறுப்பது அதிகரித்துள்ளதன் காரணமாக மரபுவழி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கால்நடை வளம் போதுமானதாக இல்லையெனவும் இறக்குமதி செய்யப்படும் பால்மா சார்பில் வௌிநாடுகளுக்கு செல்லும் பாரியளவிலான அந்நிய செலாவணியை குறைத்து கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் உள்நாட்டு பால் தொழிலை பலப்படுத்துவதற்கு போதுமான மாடுகள் வளம் இல்லாமை இந்த தொழிலின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதெனவும் பல்வேறுபட்ட தரப்பினர்களினால் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|