• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை சீருடைத் துணிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் - 2021

- பாடசாலை சீருடைத் துணிகளை பெற்றுக் கொள்வதற்கு வவுச்சர்கள் வழங்கப்படுவதற்கு பதிலாக உள்நாட்டு துணி உற்பத்தியாளர்களின் ஊடாக சீருடைத் துணிகளை வழங்குவதற்கு 2020 யூன் மாதம் 10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய கொள்வனவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, நான்கு உள்நாட்டு துணி உற்பத்தியாளர்கள் மாத்திரம் விலை மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த உற்பத்தியாளர்களினால் ஏற்கனவே மொத்த துணித் தேவையின் சுமார் 40 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை கள பரிசோதனையின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளதோடு, 2021 சனவரி மாதத்தின் இறுதியில் மொத்த பாடசாலை சீருடைத் துணித் தேவையினை பூர்த்தி செய்வதற்கு இந்த உற்பத்தியாளர்களுக்கு ஆற்றல் உள்ளதென நிரூபணமாகியுள்ளது. பாடசாலை சீருடைத் துணிகளை வழங்குவதற்கு உரியதாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தேவைப்படும் மொத்த சீருடைத் துணி அளவினை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அதற்கிணங்க வவுச்சர்களுக்குப் பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.