2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்ட கோவையைத் திருத்துத – நீதிமன்றங்களுக்கு சிறைக்கைதிகளை கொண்டு செல்கையில் அண்மையில் நிகழ்ந்த கவலைக்கிடமானதும் வன்முறையானதுமான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்கும் விதத்தில் சிறைத்தண்டனைக் கட்டளையினை நீடிப்பதற்காக சந்தேக நபர்களையோ அல்லது குற்றவாளிகளையோ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தும் தேவையினை நீக்குவதற்கு நீதவானுக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்ட கோவையைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையினால் அதன் பொருட்டு அங்கீகாரம் பெற முடியாமற் போயுள்ளது.
|