• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆட்களுக்கு எதிரான நிலக் கண்ணி வெடிகளைத் தடைசெய்வதற்குரியதாக சட்டங்களை ஆக்குதல்

- ஆட்களுக்கு எதிரான நிலக் கண்ணி வெடிகளின் பாவனை, கையிருப்புத் தொகைகளை பேணுதல், உற்பத்தி செய்தல், பரிமாறிக் கொள்தல் என்பவற்றை தடைசெய்தல் மற்றும் அவற்றை அழித்தல் சமவாயத்திற்கு இலங்கை 2017 திசெம்பர் மாதம் 13 ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளது. இந்த சமவாயத்தின் 9 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை தடுப்பதற்கும் ஒழிப்பதற்குமான தண்டனைகளை விதித்தல் அடங்கலாக பொருத்தமான சட்ட, நிர்வாக மற்றும் பிற நடவடிக்கைகள் உள்ளடக்கிய சமவாயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சட்டங்களை தயாரித்தல் வேண்டும். இதற்கிணங்க ஏற்கனவே சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் சம்பந்தமாக சட்டவரைநரினால் முன்வைக்கப்பட்டுள்ள அவதானிப்புரைகளையும் உள்ளடக்கி குறித்த சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை பூர்த்தி செய்யுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.