• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் அச்சுப் பணிகளை அரசாங்க அச்சக திணைக்களத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளல்

– அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அச்சாளராக அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் அச்சுப் பணிகளின் கணிசமான அளவினை செய்வதற்கு அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு ஆற்றல் உள்ளது. ஆயினும் அரசாங்க நிறுவனங்கள் அவற்றின் அச்சுப் பணிகளுக்காக வருடாந்தம் பாரிய தொகையினை உள்நாட்டு, வௌிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு செலுத்துகின்றமை தெரியவந்துள்ளது. இந்த விடயத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக தமது அமைச்சின் கீழ் அச்சு நிறுவனங்களை பேணி வராத அனைத்து அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் அச்சிடல் தேவைகளின் 25 சதவீதத்தினை விஞ்சாத விதத்தில் குறித்த அச்சிடல் பணிகளை அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.