2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2020 ஒக்றோபர் மாதம் முதல் 2021 சனவரி மாதம் வரை பாதுகாப்பான அரிசி கையிருப்பினை பேணுவதற்காக தொழிற்படு மூலதன தேவை – ஒவ்வொரு வருடமும் ஒக்றோபர் மாதம் முதல் சனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் நாட்டில் அரிசி உற்பத்தி மேற்கொள்ளப்படாமையினால் இந்த காலப்பகுதிக்குத் தேவையான அரிசி வருடத்தின் ஏனைய காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அரிசியிலிருந்து பேணப்பட்டுவரும் பாதுகாப்பான கையிருப்பின் மூலம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இதற்கிணங்க,2020 ஒக்றோபர் மாதம் முதல் 2021 சனவரி மாதம் வரையிலான நான்கு மாத காலப்பகுதிக்கான அரிசித் தேவையின் அண்ணளவாக 3 சதவீதம் மாத்திரம் அதாவது சுமார் 25,000 மெற்றிக்தொன் பாதுகாப்பு கையிருப்பு தொகையினை பேணும் பொருட்டு களஞ்சியப்படுத்தல் செலவுகளுடன் 2,241 மில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தினை லங்கா சத்தோச நிறுவனத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த நிறுவனத்திற்கு மக்கள் வங்கியிடமிருந்து தொழிற்படு மூலதன கடன் தொகையொன்றை நான்கு மாதங்களுக்கு பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் பொதுத் திறைசேரியினால் பிணை கடிதமொன்றை வழங்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |