• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தீகவாபி தூபியை புனரமைத்து பாதுகாத்த

– கிழக்கு மாகாணத்தில் தொல்பொருளியல் மரபுரிமைகளை முகாமிப்பதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சனாதிபதி செயலணியொன்று தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த மாகாணத்தின் பிரதான தூபியாக கருதப்படும் தீகவாபி தூபியை துரிதமாக புனரமைத்து பாதுகாப்பதற்கு நிதியமொன்றைத் தாபிப்பதற்கு இந்த செயலணியால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தீகவாபி தூபியை துரிதமாக புனரமைத்து பாதுகாப்பதற்கான பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நிதி திரட்டும் பொருட்டு நம்பிக்கை பொறுப்பு நிதியமொன்றைத் தாபிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (இளைப்பாறிய) (திரு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் அரசாங்க மற்றும் தனியார் துறையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் நியமிக்கப்படும் உபகுழுவொன்று மற்றும் இதற்கு ஒத்தாசை நல்கும் குழுக்கள் என்பவற்றின் ஊடாக சனாதிபதி செயலணியின் மேற்பார்வையின் கீழ் இந்த புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.