2020-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆபாச வௌியீடுகளை தடைசெய்யும் சட்டமூலம் - பிள்ளைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வௌியீடுகள் தகவல் தொழினுட்பம் மற்றும் பிற ஊடகங்களின் மூலம் வௌியிடப்படுவது அண்மைக் காலத்தில் துரிதமாக அதிகரித்துள்ளது. இத்தகைய விடயங்கள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கு உரியதான ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக்கோவையிலும் ஆபாச வௌியீடுகள் கட்டளைச்சட்டத்திலும் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய நிலைமைக்கு இந்த ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, இதற்கு மாற்றுவழியாக இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மை மற்றும் இலங்கை கணனி அவசர செயற்பாட்டுப் பிரிவு என்பவற்றினால் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் புதிதாக சட்டமொன்றினை வரைவதற்குத் தேவையான தகவல்கள் உள்ளடக்கப்பட்ட ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த ஆவணத்தினை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |